தங்கம் கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது சட்டவிரோத தடுப்புச் சட்டத்தில் வழக்கு - கேரள உயர்நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்

Jul 11 2020 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள தங்கக்கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில், சரக்கு விமானத்தில் 30 கிலோ தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சுமார் 15 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை பெற்றுக் கொள்வதற்காகச் சென்ற, சரித் குமாரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கடத்தலில், கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஸ்வப்னா தரப்பில், முன்ஜாமின் கோரி திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த நிலையில், ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், Fazil Fareed, Sandeep Nair ஆகியோர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் என்ஐஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00