கேரளாவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கும் தங்கக்கடத்தல் விவகாரம் - குற்றச்சாட்டுக்கு ஆளான ஸ்வப்னா ரமேஷ் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Jul 9 2020 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலத்தில், தங்கக் கடத்தல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மேலாளர் ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு தங்கம் கடத்தியுள்ளார். இந்த விவகாரம் கேரள அரசியலில், புயலை கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இந்நிலையில், தங்கக் கடத்தல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், முன்ஜாமின் கோரி, கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து, உயர்நீதிமன்றம் இன்று முடிவு செய்ய உள்ளது.