தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வருவதால், புதுச்சேரியில் வேகமாகப் பரவும் கொரோனா - கிரண்பேடி குற்றச்சாட்டு
Jul 5 2020 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வருவதால், கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில்,
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியில் வருவதால், அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் தொற்று பரவ வாய்ப்பு ஏற்படுவதாகவும், இது இயற்கை பேரிடர் சட்டத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று வெளியே வருபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.