சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் தடை : மேற்குவங்க அரசு அறிவிப்பு
Jul 5 2020 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தேசிய ஊரடங்கு காரணமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள், முழுவதும் ரத்து செய்யப்பட்டிந்தன. தற்போது கடும் கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை மட்டும் இயங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், அஹமதாபாத் ஆகிய 6 நகரங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 6 நகரங்களிலும், கொரோனா வைரஸ் பரவல், அதிகமாக உள்ளதால், இந்த தடை விதிக்கப்படுவதாக மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 717 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.