கட்டுமான திட்டப் பணிகளில் உள்ள சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தை அகற்ற நடவடிக்கை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
Jul 4 2020 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கட்டுமான திட்டங்களில் உள்ள சீன நிறுவனங்களுக்கு உதவும் விதிகள் காலாவதியாகிவிட்டதால் அவற்றை மறு ஆய்வு செய்யவேண்டும் என மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, பெரிய நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் போன்றவற்றை கட்டமைப்பதற்கு, அனுபவமுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதால், அந்த ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களுக்கு கிடைப்பது இல்லை என்று தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையை பொறுத்தவரை, சீன நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்றும், அதேபோல், சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவது சரியானதாக தெரியவில்லை என்றும் அமைச்சர் திரு. நிதின் கட்கரி குறிப்பிட்டார்.