நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது
May 31 2020 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த 24 நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், 8 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 193 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 143 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 164- ஆகவும் அதிகரித்துள்ளது.