நாடு முழுவதும் ஒரு லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது
May 31 2020 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில், கடந்த ஜனவரி 30-ம் தேதி, முதல்முறையாக கேரளாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் படிப்படியாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த வைரஸ் வேகமாகப் பரவியது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிர்பலியும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. டெல்லியில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், குஜராத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 980 பேர் உயிரிழந்துவிட்டனர். நாடு முழுவதும் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 81 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.