கொரோனா இறப்பு விகிதத்தில் சீனாவை விஞ்சியது இந்தியா - 4 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
May 29 2020 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா இறப்பு விகிதத்தில் சீனாவை இந்தியா விஞ்சியுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் முதலில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீன அரசு எடுத்த நடவடிக்கையால் அங்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டு, இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இறப்பு விகிதத்தில் சீனாவை இந்தியா விஞ்சியுள்ளது. சீனாவில் 82 ஆயிரத்து 995 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 799 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், 4 ஆயிரத்து 711 பேர் பலியாகியுள்ளனர்.