வங்கிகளில் மாத தவணை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும், வட்டி வசூலிக்‍கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கு - ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், ஒரு வாரத்திற்குள் பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் உத்தரவு

May 26 2020 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கிகள், மாத தவணைகளுக்‍கான வட்டியை வசூலிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்‍கில், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்‍க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா முதல்கட்ட ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட போது, மக்‍களின் நிதி நெருக்‍கடியை குறைக்‍க, வங்கிகளில் பெற்ற கடனுக்‍கான மாத தவணைகளை 3 மாதங்கள் ஒத்திவைக்‍கலாம் என்றும், அந்த அவகாச காலத்தை கடன் பெற்றவர்களின் 'சிபில் ஸ்கோரில்' சேர்க்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. கடந்த சில தினங்களுக்‍கு முன்னர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்‍தி காந்த தாஸ், மாதத் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிக்‍கப்படுவதாக தெரிவித்தார். இருந்தபோதிலும், வங்கிகள் வட்டி வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வங்கிகள் வட்டி வசூலிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்‍கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து, ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்‍க, ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்‍கு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00