டெல்லி துக்ளகாபாத் குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து : 2000 குடிசைகள் எரிந்து சாம்பலாகின
May 26 2020 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி துக்ளகாபாத் குடிசைக் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து, பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது.
டெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள துக்ளகாபாத்தில், ஏராளமான குடிசைகள் கொண்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு நள்ளிரவில் தீப்பிடித்ததால் பெரும் பதற்றம் உருவானது. காற்றில் மளமளவென பரவிய தீ 2 ஆயிரம் குடிசைகளை பற்றியது. இதனையடுத்து, மக்கள் குடிசைகளில் இருந்து அலறி அடித்து வெளியேறினர். தகவல் அறிந்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்க கடுமையாக போராடினர். தற்போது, தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. சேதங்கள் குறித்து முழுமையான தகவல் வெளியாகாத நிலையில், உயிரிழப்பு ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.