இந்தியாவில் கடந்த 15 நாட்களில் மட்டும், 70 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு - மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
May 26 2020 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் கடந்த 15 நாட்களில் மட்டும், 70 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கிய 100 நாட்களுக்குப் பிறகே, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வரையிலான 15 நாட்களில் மட்டும், 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. மஹாராஷ்ட்ரா மற்றும் தமிழகத்தில், கடந்த 12 நாட்களில், கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 நாட்களில் 2 மடங்கு உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக, 2 நாட்களில் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.