மாநிலங்களே முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்தால் ஊரடங்கு வாபஸ் : கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

Apr 9 2020 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு உத்தரவு குறித்து மாநிலங்களே முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்தால், கொரோனா பரவாத மாவட்டங்களில் ஊரடங்கு வாபஸ் பெறப்படும் என கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா கூறியுள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. எடியூரப்பா, கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மாநில அரசின் அனைத்து வகையான வரி வருவாயும் நின்றுவிட்டதாக கூறினார். ஊரடங்கு உத்தரவு குறித்து மாநிலங்களே முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்தால், வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படும் என தெரிவித்தார். அவ்வாறு வாபஸ் பெறப்பட்டால், மக்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ளலாம் என்றும், ஆனால் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர அனுமதிக்க மாட்டோம் என கூறினார். கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சரிசெய்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்த திரு. எடியூரப்பா, கொரோனா நிதிக்‍காக, எம்.எல்.ஏ.க்களின் ஊதியத்தில் 30 சதவீதத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00