மாநிலங்களே முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்தால் ஊரடங்கு வாபஸ் : கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா
Apr 9 2020 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊரடங்கு உத்தரவு குறித்து மாநிலங்களே முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்தால், கொரோனா பரவாத மாவட்டங்களில் ஊரடங்கு வாபஸ் பெறப்படும் என கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா கூறியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. எடியூரப்பா, கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மாநில அரசின் அனைத்து வகையான வரி வருவாயும் நின்றுவிட்டதாக கூறினார். ஊரடங்கு உத்தரவு குறித்து மாநிலங்களே முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்தால், வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படும் என தெரிவித்தார். அவ்வாறு வாபஸ் பெறப்பட்டால், மக்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ளலாம் என்றும், ஆனால் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர அனுமதிக்க மாட்டோம் என கூறினார். கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சரிசெய்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்த திரு. எடியூரப்பா, கொரோனா நிதிக்காக, எம்.எல்.ஏ.க்களின் ஊதியத்தில் 30 சதவீதத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.