கொரோனா குறித்த தவறான தகவல்களை நீக்‍க சமூக ஊடகங்களுக்‍கு மத்திய அரசு உத்தரவு - பதிவிடுவோரின் தகவல்களை சேகரிக்‍குமாறும் அறிவுறுத்தல்

Apr 9 2020 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் தவறான தகவல்களை நீக்‍குமாறும், அதனை பதிவிடுவோர் குறித்த தகவல்களை சேகரிக்‍குமாறும், சமூக ஊடகங்களை மத்திய அரசு கேட்டுக்‍கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

கொரோனா குறித்து ஃபேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பல தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் சில தகவல்கள் தவறான வழிகாட்டுதல்களை மக்களுக்கு தரும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதுடன், சுய மருத்துவத்தை ஊக்குவித்து உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இவை தவிர கொரோனாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைளை பலவீனப்படுத்தும் வகையிலும் பல பதிவுகள் வெளியாவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் தவறான தகவல்களை நீக்‍குமாறும், அதனை பதிவிடுவோர் குறித்த தகவல்களை சேகரிக்‍குமாறும், சமூக ஊடகங்களை மத்திய அரசு கேட்டுக்‍கொண்டுள்ளது. இதுதொடர்பாக சமூக ஊடக நிறுவனங்களுக்‍கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00