நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது - 184 பேர் உயிரிழந்த நிலையில் 569 பேர் குணமடைந்தனர்
Apr 9 2020 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 738 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. டெல்லியில் 669 பேருக்கும், தெலங்கானாவில் 453 பேருக்கும், ராஜஸ்தானில் 413 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் 361 பேருக்கும், ஆந்திராவில் 348 பேருக்கும், கேரளாவில் 345 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 6 ஆயிரத்து 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 184 பேர் உயிரிழந்தனர். 569 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.