நாடு முழுவதும் நீடிக்கும் ஊரடங்கு உத்தரவால் மேம்பட்டது காற்றின் தரம் - நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு பல மடங்கு குறைந்திருப்பது ஆய்வில் தகவல்
Apr 8 2020 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு பல மடங்கு குறைந்துள்ளது.
டெல்லியில் ஊரடங்கு காரணமாக சில நாட்களாக தொடா்ந்து காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லியைப் போலவே மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் காற்று மாசு வெகுவாகக் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சினையால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாலும், வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளதாலும் காற்று மாசு அதிக அளவில் குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.