நாடாளுன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்க வகை செய்யும் அவசர சட்டம் - ஒப்புதல் வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
Apr 8 2020 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு, 2020-21, 2021-22 ஆகிய ஆண்டுகளுக்கான நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியை நிறுத்தி வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும், பிரதமர் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படி மற்றும் ஓய்வூதியங்களை ஒரு வருடத்திற்கு 30 சதவீதம் குறைக்கும் சட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கியது. இந்த தொகை கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டது.