பெங்களூரு, பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட இளம்பெண் கைது - சிறையில் அடைப்பு
Feb 21 2020 7:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட, இளம் பெண் அமுல்யாவின் செயலுக்கு, அவரது தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அகில இந்திய மஜ்லிஸ் - இ - இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் திரு. அசாதுதீன் ஓவைசி பங்கேற்ற, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரணியில், அமுல்யா என்ற இளம்பெண் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டார். இதைக் கேட்ட திரு. ஓவைசி, அமுல்யாவிடமிருந்து 'மைக்'கை வாங்க முயற்சித்தார். எனினும் அவர் தொடர்ந்து முழக்கமிட்டபடியே இருந்தார். இதைப் பார்த்த போலீசார், அமுல்யாவிடமிருந்து, வலுக்கட்டாயமாக 'மைக்'கை வாங்கி இழுத்துச் சென்றனர். இதையடுத்து, தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமுல்யா, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது மகளின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள அமுல்யாவின் தந்தை, சில அமைப்புகள் தன் மகளை தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.