பாகிஸ்தான் மீதான துல்லியத் தாக்குதல் குறித்து பெருமை பேசும் பிரதமர் நரேந்திர மோதி, முழு விவரங்களை வெளியிட முடியுமா? - மத்தியப்பிரதேச முதலமைச்சர் கமல்நாத் சவால்
Feb 21 2020 6:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் மீதான துல்லியத் தாக்குதல் குறித்து தொடர்ந்து பெருமை பேசிவரும் பிரதமர் திரு. நரேந்திர மோதி, அதுகுறித்த முழு விவரங்களை வெளியிட முடியுமா என மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு. கமல்நாத் சவால் விடுத்துள்ளார்.
மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு. கமல்நாத், பிரதமர் திரு. மோதியை கடுமையாக விமர்சித்தார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதாக தெரிவித்த திரு. மோதி, 2 லட்சம் வேலைவாய்ப்புகளைக் கூட உருவாக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் பற்றி பெருமை பேசும் பிரதமர், அதுகுறித்த முழு விவரங்களை வெளியிட முடியுமா என சவால் விடுத்தார். 1971-ம் ஆண்டு, பாகிஸ்தானுடனான போரின்போது, அந்நாட்டு வீரர்கள் 90 ஆயிரம் பேரை, அப்போதைய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி சரணடைய வைத்ததை, மத்திய பா.ஜ.க. அரசு பேசாது என்றும் குறிப்பிட்டார்.