கேரளாவில் வளர்ப்பு மகளுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்த இஸ்லாமிய தம்பதி
Feb 20 2020 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய தம்பதி தங்களது வளர்ப்பு மகளுக்கு இந்து முறைப்படி திருமணம் நடத்திவைத்த சம்பவம் அங்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது தோட்டத்தில் பணிபுரிந்த ஊழியர் மற்றும் அவரது மனைவி இறந்து விடவே அரவது 7 வயது மகளான ராஜேஸ்வரியை சொந்த மகள் போன்று வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது ராஜேஸ்வரிக்கு 22 வயது ஆகிறது. அவருக்கு விஷ்ணு என்பவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் அப்துல்லா. இந்நிலையில் ராஜேஸ்வரி-விஷ்ணு ஜோடிக்கு அங்குள்ள Kanhangad பகவதியம்மன் ஆலயத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் அப்துல்லாவின் குடும்பத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மதநல்லிணக்கத்துக்கு இலக்கணமாக நிகழ்ந்த இந்த திருமணம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.