இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சிங்கத்தின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு
Feb 20 2020 1:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிங்கத்தின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் காடுகள் சுருங்கியதாலும், வேட்டை, நோய் தாக்கம் போன்ற காரணங்களாலும் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வந்தன. தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கிர் காடுகளில் கடந்த 1985-ம் ஆண்டில் 239 சிங்கங்கள் மட்டுமே இருந்ததாக கூறப்பட்டது. அந்த எண்ணிக்கை 2015-ம் ஆண்டு 503 ஆக உயர்ந்தது. தற்போது, எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கங்கள் வசிப்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிங்கத்தின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.