கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 3-வது நபரும் குணமடைந்தார் : கடைசி பரிசோதனை முடிவுகள் மூலம் வெளியான தகவல்
Feb 19 2020 7:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மூன்றாவது நபரும் குணமடைந்துள்ளதாக திருச்சூர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் 3 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த மூவரும் சீனாவில் இருந்து கேரளத்துக்குத் திரும்பியவர்கள். அவர்கள் மூவரும் தனிமைப் படுத்தப்பட்டு, திருச்சூர், ஆழப்புழா மற்றும் காசர்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதில், ஆழப்புழாவில் சிகிச்சை பெற்று வந்த நபர் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததையடுத்து, கடந்த வியாழக்கிழமை வீடு திரும்பினார். இதைத் தொடர்ந்து காசர்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது கடைசி பரிசோதனையின் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது.