ட்ரம்பின் வருகையையொட்டி, அகமதாபாத்தில் குடிசை பகுதிகளை அகற்ற நடவடிக்கை - அங்குள்ள குடும்பங்கள் 7 நாளில் வெளியேற கெடு
Feb 18 2020 1:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையை முன்னிட்டு, குஜராத்தில், மொடேரா பகுதி குடிசைவாசிகள், அங்கிருந்து 7 நாட்களில் காலி செய்ய வேண்டும் என அஹமதாபாத் நகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கெள்கிறார். இந்தப் பயணத்தின்போது, குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள மொடேரா கிரிக்கெட் மைதான திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், 3 மணி நேரம் மட்டுமே அவர் பங்கேற்கவுள்ளார். டிரம்பை வரவேற்க, குஜராத் அரசும், மத்திய அரசும், சுமார் 100 கோடி ரூபாய் செலவில் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அஹமதாபாத்தில், புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருவதுடன், குடிசை பகுதிகளை மறைக்க, 7 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டிரம்பின் வருகைக்காக குஜராத்தின் மொடேரா பகுதி குடிசைவாசிகள், அங்கிருந்து 7 நாட்களில் காலி செய்ய வேண்டும் என அஹமதாபாத் நகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மொடேரா குடிசை பகுதியில், 45 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், அவர்கள் எங்கு செல்வார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.