மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை - 36 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தியது ஏர்டெல் நிறுவனம்

Feb 17 2020 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை, ஏர்டெல் நிறுவனம் இன்று செலுத்தியது.

தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், தங்களது மொத்த வருவாயில், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை செலுத்தத் தவறியது தொடர்பான வழக்கில், நிலுவைத் தொகையை உடனே செலுத்துமாறு உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபரில் உத்தரவிட்டது.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதைத் செலுத்தத் தவறியதை அடுத்து, அந்நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் கம்பெனி இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப் போவதாக கடந்த 14-ம் தேதி உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பாரதி ஏர்டெல், பாரதி ஹெக்சகாம் மற்றும் டெலினார் சார்பாக, இன்று, 10 ஆயிரம் கோடி ரூபாயை ஏர்டெல் நிறுவனம் செலுத்தியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நிறுவனத்தின் சுய மதிப்பீட்டுக் கணக்கை விரைவாக முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த விசாரணை நடைபெறும் நாளான அடுத்த மாதம் 17-ம் தேதிக்கு முன்னரோ அல்லது விசாரணை முடிந்தவுடனோ, மீதமுள்ள நிலுவைத் தொகையை முறையாக செலுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00