சத்தீஷ்கர் மாநில வனத்திற்குள் புலி ஒன்று சுற்றுலா பயணிகளை விரட்டிவந்த காட்சி இணையத்தில் வைரல்
Feb 17 2020 2:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சத்தீஷ்கர் மாநில வனத்திற்குள், புலி ஒன்று, சுற்றுலா பயணிகளை விரட்டிவந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ராய்ப்பூரின் புறநகர் பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு சென்ற சுற்றுலா பயணிகளில் ஒருவர், வாகனத்தில் இருந்து இறங்க முயன்றார். அவரைக் கண்ட புலி, வாகனத்தை துரத்த ஆரம்பித்தது. அப்போது, வன ஊழியர்கள் இருவர், தங்கள் தோளில் இருந்த துண்டுகளை வீசி புலியை சீண்டினர். துண்டைக் கவ்விய புலியை, நாய்க்குட்டியைப் போல இழுத்து சென்றனர். இந்நிலையில், புலியிடம் விளையாட்டுக் காட்டிய இரு வனத்துறை ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.