குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநில அரசுகளும், பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்
Jan 20 2020 8:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநில அரசுகளும், பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென, மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி.மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும், மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற தேசிய மக்கள் தொகை பதிவு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தையும் புறக்கணித்தார். பா.ஜ.க. அல்லதாக மாநில அரசுகள், தேசிய மக்கள் பதிவேடு குறித்து எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், அதுகுறித்து கவனமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள செல்வி.மம்தா பானர்ஜி, திரிபுரா, அசாம் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.