நாடு முழுவதும் வழக்கத்தைவிட 3 மடங்கு அதிக மழைப்பொழிவு : இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியீடு
Jan 20 2020 8:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகமான மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் வழக்கத்தை விட இரண்டு முதல் 3 மடங்கு அதிகமான மழைப்பொழிவைப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், இம்மாதம், 300 விழுக்காடுக்கும் அதிகமான மழைப்பொழிவைப் பெற்றுள்ளதாகவும், திரிபுராவில் 670 விழுக்காடும், மிசோரம் மாநிலத்தில் 295 விழுக்காடும் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் வீசிய காற்று காரணமாக இந்திய துணைக் கண்டத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டதாகவும், இமயமலைகளில் மோதிய அந்தக் காற்றின் தாக்கத்தினால் வடக்கத்திய சமவெளிகள் மற்றும் கங்கைச் சமவெளியில் மழை பெய்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.