பாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா, போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு - கட்சி நிர்வாகிகள் வாழ்த்து
Jan 20 2020 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக திரு. ஜே.பி.நட்டா, போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், பா.ஜ.க.வில் பின்பற்றப்படும் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கொள்கையின் அடிப்படையில், மத்திய அமைச்சராக திரு. அமித்ஷா பதவி வகித்து வருவதால், அவருக்கு பதிலாக திரு. ஜே.பி.நட்டா, பா.ஜ.க. புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த திரு. நட்டா, போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.