டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங். சார்பில் போட்டியா? : நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி மறுப்பு
Jan 17 2020 7:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் போட்டியுடவுள்ளதாக ஊடகங்களில் வந்த தகவலை, நிர்பயாவின் தாயார் திருமதி.ஆஷா தேவி மறுத்துள்ளார். தனக்கு அரசியலில் ஆர்வமில்லை எனத் தெரிவித்த அவர், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்பதே தனது நோக்கமெனவும் தெரிவித்தார். டெல்லி காங்கிரஸ் தலைவர் திரு.சுபாஷ் சந்திராவும் இச்செய்தியை மறுத்ததோடு, ஒருவேளை அவர் போட்டியிட விரும்பினால் அதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.