விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட்-30' செயற்கைக்கோள் - இஸ்ரோ வரலாற்றின் மேலும் ஒரு வெற்றிப் பயணம்
Jan 17 2020 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, 'ஜிசாட்-30' செயற்கைக்கோள், இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. 3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தென் அமெரிக்காவின் ஃப்ரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம், இன்று அதிகாலை 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
2020-ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளாக விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-30, இந்திய நிலப்பரப்பு மற்றும் தீவுகள், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு விரிவாக்கப்பட்ட பாதுகாப்பை வழங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது.