அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரம் இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரிக்கு உள்ளது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Apr 18 2014 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரம் இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரிக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருவாயில் குறிப்பிட்ட பங்கை மத்திய அரசுக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் செய்திருக்கும் நிலையில், அந்த நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்வதற்கு மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது என டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. அதனை எதிர்த்து, அணைத்திந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சங்கம், இந்திய செல்லுலார் சேவை நிறுவனங்கள் சங்கம் உள்பட பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திரு. விக்ரம்ஜீத் சென் ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில், தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரம் இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரிக்கு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.