இந்திய கடற்படைத் தலைமை தளபதியாக ஆர்.கே. தோவான் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - மூத்த துணைத் தளபதி சேகர் சின்ஹா பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்
Apr 18 2014 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கடற்படைத் தலைமை தளபதியாக ஆர்.கே. தோவான் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மூத்த துணைத் தளபதி சேகர் சின்ஹா பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையில் நீர்மூழ்கி கப்பல்களில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளுக்கு பொறுப்பேற்று கடற்படைத் தளபதி ஜோஷி பதவி விலகியதையடுத்து, அப்பதவிக்கு தோவான் நியமிக்கப்பட்டார். தோவான் நியமனத்தில் பணிமூப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தோவானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மூத்த துணைத் தளபதி சேகர் சின்ஹா பதவி விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்படையின் மூத்த துணைத் தளபதியும், மேற்கு மண்டல கமாண்டருமான சேகர் சின்ஹா, தோவானைவிட 6 மாதங்கள் பணி மூப்பு பெற்றுள்ளபோதும் அவரை பின்னுக்கு தள்ளி நியமனம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால், கடும் அதிருப்தி அடைந்துள்ள சின்ஹா உடனடியாக விருப்ப ஓய்வில் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு அனுமதி கிடைக்காவிடில் பதவி விலக தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் 4-வது பெரிய கடற்படையான இந்திய கடற்படையின் தளபதி நியமனத்தில் சர்ச்சை வெடித்திருப்பது பாதுகாப்புத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.