காங்கிரஸ் எம்.பி. மீது கொடுத்த பாலியல் புகாரை நடிகை ஸ்வேதா மேனன் திரும்பப்பெற்றதற்கு அரசியல் நிர்பந்தமே காரணம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
Nov 4 2013 2:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் எம்.பி. மீது கொடுத்த பாலியல் புகாரை நடிகை ஸ்வேதா மேனன் திரும்பப்பெற்றதற்கு அரசியல் நிர்பந்தமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான பீதாம்பர குரூப், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஸ்வேதாமேனன் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக, பீதாம்பர குரூப் மீது நடிகை ஸ்வேதா மேனன், கொல்லம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில், 73 வயதான காங்கிரஸ் எம்.பி. பீதாம்பரத்தின் மீது, கொல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேரில் சென்று விசாரணை நடத்தினர். காங்கிரஸ் எம்.பி. பீதாம்பரத்தை கண்டித்து பெண்கள் அமைப்பினர் போராட்டங்களும் நடத்தினர். இந்நிலையில், பீதாம்பர குரூப் தம்மிடம் மன்னிப்பு கோரியதால் சட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதாக திடீரென அறிவித்தார். அவரது இந்த முடிவுக்கு அரசியல் நிர்பந்தமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.