ராஜநாகம் உள்ளிட்ட கொடிய விஷம் கொண்ட பாம்புகளை பயமின்றி கையாளும் இளைஞர் - பொதுமக்கள் பிரமிப்பு
Jun 26 2014 11:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜநாகம் உள்ளிட்ட கொடிய விஷம் கொண்ட பாம்புகளை எவ்வித பயமும் இன்றி கையாளும் கேரள இளைஞர் அனைவரையும் பிரமிக்க வைக்கிறார்.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரஜ்னீஷ் என்ற இளைஞர், தனது வீட்டின் அருகே வசிப்போர் பாம்பு குறித்து தகவல் அளித்தால் ஓடிச்சென்று அவற்றை பிடித்து பாதுகாக்கிறார். இவ்வாறு கிடைத்த தகவலையடுத்து, மலைப்பாம்பு முட்டைகளை சேகரித்த அவர், அதனை அடைகாக்க வைத்து அதன் குட்டிகளையும் பராமரித்து வருகிறார். 8 வயதில் இருந்து பாம்புகளை பிடிக்கத் தொடங்கிய ரஜ்னீஷ், இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும் ராஜநாகம், கட்டுவிரியன் உள்ளிட்ட கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் லாவகமாக கையாளுகிறார்.