ஜம்மு காஷ்மீர் மாநிலம் வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்கு ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Aug 1 2014 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் மாநிலம் வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்கு ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கெரன் பகுதி வழியாக, தீவிரவாதிகள் சிலர் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீருக்கு ஊடுருவ முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அப்பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் சுடத்தொடங்கினர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் யார்?, எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.