பாம்பை ஏவிவிட்டு அச்சுறுத்தி பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் ஹைதராபாத்தில் கைது - அறிக்கை அளிக்க போலீசாருக்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ்
Aug 27 2014 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாம்பை ஏவிவிட்டு அச்சுறுத்தி பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை, ஹைதராபாத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அறிக்கை அளிக்கும்படி அந்நகர போலீசாருக்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹைதராபாத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த பெண்ணை, ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், 7 பேரை கைது செய்தனர். அந்தக் கும்பல், வீட்டில் புகுந்து பாம்பை ஏவிவிட்டு பெண்ணை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இந்த சம்பவத்தால் தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண், பின்னர் காப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கும்பல் இதுபோன்று 11 சம்பவங்களில் ஈடுப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் போலிசார் கூறியுள்ளனர். இதுகுறித்த விசாரணையை ஹைதரபாத் போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி தேசிய பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.