ஏர்செல்-மேக்சிஸ் விவாகரத்தில், தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்டோருக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் - 600 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை
Oct 30 2014 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏர்செல் மேக்சிஸ் பண பரிவர்த்தனை தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்தியமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் உள்ளிட்டோருக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாறன் சகோதரர்களின் 600 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அமலாக்கப்பிரிவு விரைவில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன அதிபர் திரு. சிவசங்கரனை மிரட்டி, அந்நிறுவனத்தின் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவைத்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த பேரத்திற்கு கைமாறாக மேக்சிஸ் நிறுவனம், தயாநிதிமாறனின் சன் டைரக்ட் நிறுவனத்தில் 750 கோடி ரூபாயை முதலீடு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பணபரிவர்த்தனை தொடர்பாக, மாறன் சகோதரர்களுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டுமென சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாறன் சகோதரர்களின் 600 கோடி ரூபாய் சொத்துக்களை கைப்பற்ற அமலாக்கப்பிரிவு அடுத்த சில வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.