டெல்லி திஹார் சிறையில் கடந்த 2 வாரங்களில் 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு : உயர்மட்ட விசாரணை நடத்த சிறைத்துறை உத்தரவு

Sep 20 2014 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி திஹார் சிறையில் கடந்த 2 வாரங்களில் 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சிறைச்சாலைகளில், டெல்லியில் உள்ள திஹார் சிறை முக்கியமானதாகும். தீவிரவாத செயல் உள்ளிட்ட கடுமையாக குற்றங்களில் ஈடுபட்டவர்கள், ஊழல் வழக்கில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்கள் என பலர் இங்கு சிறைத்தண்டனை அனுபவித்துள்ளனர். பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட இச்சிறையில், கடந்த இரு வாரங்களில் மட்டும் விசாரணைக் கைதிகள் 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறைத்துறை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இதுபோன்ற உயிரிழப்புகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, திஹார் சிறை மர்ம மரணங்கள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. அலோக் வர்மா தெரிவித்துள்ளார். விசாரணைக் கைதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது சக கைதிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00