ஆண்டு விழாவையொட்டி 100 ரூபாய்க்கு பயண டிக்கெட்டுகளை வழங்கும் திட்டம் - ஏர்-இந்தியா அறிமுகம்
Aug 27 2014 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏர்-இந்தியா தனது ஆண்டு விழாவையொட்டி, 100 ரூபாய்க்கு பயண டிக்கெட்டுகளை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, இன்றுமுதல் வரும் 31-ம் தேதி வரை 100 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
ஏர்-இந்தியா நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது. இதனையடுத்து, இணைக்கப்பட்ட நிறுவனம் ஏர்-இந்தியா என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறது. இந்த இணைப்பு தினத்தை ஏர்-இந்தியா தினமாக கொண்டாட முடிவு செய்துள்ள நிறுவனம், பயணிகளுக்கு சிறப்பு சலுகையாக 100 ரூபாய்க்கு விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இன்றுமுதல் சிறப்பு டிக்கெட்டுகள் விற்பனை தொடங்குகிறது. வரும் 31-ம் தேதி வரை இந்த சலுகைத் திட்டம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணம் 100 ரூபாய் என்றபோதிலும், வரிகள் தனி என ஏர்-இந்தியா அறிவித்துள்ளது.