விளைபொருளுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயிக்கும் முறையை கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தல் : கடலூரில் வேளாண்மை விற்பனை கூட அலுவலகம் முற்றுகை போராட்டம்

Jul 18 2018 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

விளைபொருளுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயிக்கும் முறையை கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேளாண்மை விற்பனை கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வேளாண்மை விற்பனைக் கூடத்தில் அரசு நிர்ணயித்துள்ள அளவுப்படியும், தரத்தின்படியும் தரமான நெல்லுக்குரிய விலையினை அங்கு இருக்கும் வியாபாரிகள் வழங்கவில்லை என்றும், அனைத்து ரக நெல்லுக்கும் ஒரே விலையை நிர்ணயிப்பதால் தரமான நெல்லை கொண்டு வரும் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்றும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், விளைபொருளுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயிக்கும் முறையை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி, விருத்தாசலம் வேளாண்மை விற்பனை கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதிகாரியிடம் மனுவும் அளித்தனர்.

இதனிடையே, திருவாரூர் மாவட்டத்தில், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு எனக்‍கூறி, அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, வெளிமாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஊழல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், கிழிந்த சாக்குகள் கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00