காவிரி டெல்டா மாவட்டங்களில், ஆறு, ஏரி, குளங்களை தூர்வார ஒதுக்கிய 400 கோடி ரூபாய் நிதியில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதை கண்டித்தும், தூர் வாரப்படாததால், காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததைக் கண்டித்தும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில், நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரியில் நீர் கரைபுரண்டோடும் நிலையிலும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு கிடப்பதையும், பல லட்சம் ஏக்கர் பாசனப் பகுதி இன்னும் பாலைவனமாக உள்ளதையும், ஆறு, ஏரி, குளங்களை தூர்வார ஒதுக்கிய 400 கோடி ரூபாய் நிதியில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதை கண்டித்தும், தூர் வாரப்படாததால், காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததைக் கண்டித்தும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து, கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் திரு.காவிரி எஸ். ரங்கநாதன், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் திரு. அய்யாகண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு. பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், பொதுமக்கள், விவசாய சங்க பெருமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.