பொறியியல் மாணவர் சேர்க்கை துணை கவுன்சிலிங் - இன்றுடன் ஆன்லைன் பதிவு நிறைவு
Jul 24 2019 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொறியியல் படிப்புக்கான துணைக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இன்றுடன் விண்ணப்ப பதிவு முடிவுக்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வில் ஏற்கெனவே 3 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளன. 4ம் சுற்று கலந்தாய்வு வரும் 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதுவரை சுமார் 34 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியிருக்கும் நிலையில், ஒருலட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 215 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவிகித இடங்கள்கூட நிரம்பவில்லை. 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேராத அவலமும் அரங்கேறியுள்ளது.
இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. +2 துணைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக நடைபெறும் இந்த கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவுகள் கடந்த 20ம் தேதி தொடங்கின.