ஜோலார்பேட்டையில் இருந்து 2-வது முறையாக சென்னைக்கு வந்த குடிநீர் ரயில் - நீரேற்று நிலையத்திலிருந்து தொடர்ந்து விநியோகம் செய்ய ஏற்பாடு
Jul 24 2019 1:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2வது முறையாக ரயிலில் குடிதண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது. குடிநீரை ஏற்றிக்கொண்டு சென்னை வில்லிவாக்கத்திற்கு வந்த ரயிலை, குடிநீர் வாரிய அதிகாரிகள் வரவேற்றனர்.
சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஜோலார்பேட்டையிலிருந்து தென்னக ரயில்வேயின் உதவியுடன் ரயிலில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்திலிருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி முதல் முறையாக ரயிலில் தண்ணீர் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று 2வது முறையாக ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. குடிநீரை ஏற்றிக்கொண்டு வில்லிவாக்கம் வந்த ரயிலை, குடிநீர் வாரிய அதிகாரிகள் வரவேற்றனர்.