நடிகர் சூர்யா எழுப்பிய 10 கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் கூறவேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
Jul 23 2019 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய கல்விக்கொள்கையை கண்டித்து நாளை மறுநாள் முதல் வரும் 30ம் தேதி வரை ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி திரு.ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த அவர், தேசிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா எழுப்பியுள்ள 10 கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் கூறவேண்டும் என வலியுறுத்தினார்.