செவிலியர் பள்ளி மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் - போராட்டம் நடத்தி வரும் செவிலிய மாணவிகள் கொடுமைப்படுத்தப்படுவது, மனித உரிமை மீறல் என மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு
Jul 19 2019 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கீழ்ப்பாக்கம் செவிலியர் பள்ளி மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்தி வரும் செவிலிய மாணவிகள் கொடுமைப்படுத்தப்படுவது மனித உரிமை மீறல் என, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவிகளை டாக்டர் ரவீந்தரநாத் சந்திக்கச் சென்றபோது, அவர்களை பார்க்கவிடாமல் மருத்துவமனை ஊழியர்கள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செவிலியர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு டாக்டர் ரவீந்திரநாத் கடும் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ரவீந்திரநாத், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளுக்கு உணவு, தண்ணீர் தராமல் கொடுமைப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.