தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் - தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Jul 8 2019 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம், இமய மலை பகுதிகளில் நிலவி வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர், தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம், இமய மலை பகுதிகளில் நிலவி வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர், தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், கூடலூரில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையில், மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.