ஏரி, குளங்களை தூர்வாருவதாகக்‍ கூறி, தமிழக அரசு கஜானாவை ஈபிஎஸ் தரப்பு தூர்வாரிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - குடிமராமத்து பணிக்‍கு எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது குறித்து வெள்ளை அறிக்‍கை வெளியிட வலியுறுத்தல்

Jun 18 2019 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏரி, குளங்களை தூர்வாருவதாகக்‍ கூறி, தமிழக அரசு கஜானாவை ஈபிஎஸ் தரப்பு தூர்வாரிவிட்டதாக கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிமராமத்து பணிக்‍கு எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது என்பது குறித்து வெள்ளை அறிக்‍கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி விரைவில் முடிவுக்‍கு வரும் என்றும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.

8 வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களை பொதுமக்‍கள் கடுமையாக எதிர்க்‍கும் போதிலும், அதனை செயல்படுத்தியே ஆக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டுவதன் மர்மம்தான் என்ன என்றும் திரு. டிடிவி தினகரன் கேள்வி எழுப்பிய அவர், மக்‍கள் விரும்பாத திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தக்‍கூடாது என்றும் வலியுறுத்தினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் இருப்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்‍கை எடுக்‍கப்படாததால், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினரே பொதுமக்‍களுக்‍கு குடிநீர் வழங்கும் சேவையில் இறங்கியிருப்பதாக திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00