மதுரையில் காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
Jun 18 2019 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில், காவல்துறையினர் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மதுரை சிம்மக்கல் பகுதியில் வாகன சோதனையின்போது போலீசார் தாக்கியதில் விவேகானந்த குமார் என்ற இளைஞர் நேற்று உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் நேற்று ராஜாஜி அரசு மருத்துவமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்தொடர்ச்சியாக இன்று விவேகானந்த குமார் உயிரிழப்புக்கு காரணமான போரீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அவரது உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் அலுவலகத்தில் ஆட்சியர் இல்லாத நிலையில் புகார் மனுவை வாங்க தங்களை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.