இலங்கையில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல் - 6 பேரை கைது செய்து விசாரணை

May 20 2019 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 82 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2 புள்ளி ஐந்து ஆறு கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. பாப்கான் தயாரிக்கும் கருவி, பஞ்சிங் மிஷின் மற்றும் சூட்கேஸ் கைப்பிடி ஆகியவற்றுக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். இதுதொடர்பாக சென்னை, ராமநாதபுரம், ஆந்திராவை சேர்ந்த 6 பயணிகளை கைது செய்து, சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹக்கீம், நாகூர், அராபத் ஆகியோர், பற்பசைபோல் தங்கத்தை உருக்கி உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்‍கப்பட்டது. இதனையடுத்து, 41 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ஒரு கிலோ 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00