பாஜகவுடன், திமுக பேசியது உண்மை தான் - தமிழிசை சௌந்தர்ராஜன் மீண்டும் திட்டவட்டம் - தகுந்த நேரத்தில் நிரூபிப்பதாகவும் உறுதி
May 15 2019 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தல் கூட்டணி தொடர்பாக, தங்கள் கட்சியுடன், திமுக பேசியது உண்மைதான் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்தவாரம் வெளியாக உள்ள நிலையில் தி.மு.க.,-பா.ஜ.க.யுடன் பேசிவருவதாக பா.ஜ.க. மாநில தலைவர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்த தகவலை நிராகரித்த தி.மு.க.தலைவர் திரு. ஸ்டாலின், பா.ஜ.க.வுடன் பேசியதை நிரூபித்தால், தான் அரசியலைவிட்டு விலகுவதாக தெரிவித்தார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளரிடம் பேசிய திருமதி. தமிழிசை சௌந்தரராஜன், பொதுத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன், தி.மு.க. பேசியது உண்மைதான் என்றும், எந்த காலகட்டத்தில் அதை நிரூபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன் என்றும் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.