கழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்த எடப்பாடி அணியையும், தி.மு.க., வேட்பாளரையும் தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும் - அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் டிடிவிதினகரன் வலியுறுத்தல்
May 15 2019 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரவக்குறிச்சி தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவிதினகரன், கழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்த எடப்பாடி அணியையும்,தி.மு.க., வேட்பாளரையும் தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் கழக வேட்பாளர் திரு. P.H. சாகுல் ஹமீதை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். புங்கம்பாடி கார்னர் பவித்திரம் மேடு புண்ணம் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டிருந்த மக்களிடையே திரு.டிடிவி தினகரன் எழுச்சியுரையாற்றினார். இதனைத்தொடர்ந்து, வேலாயுதம் பாளையத்தில் திரண்டிருந்த மக்களிடையே கழக வேட்பாளர் திரு.P.H. சாகுல் ஹமீதை ஆதரித்து பிரச்சாரம் செய்த திரு.டிடிவி தினகரன் கழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்த எடப்பாடி அணியையும்,தி.மு.க., வேட்பாளரையும் தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து தோட்டக்குறிச்சியில், பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசிய திரு. டிடிவி தினகரன்,துரோகத்தை எதிர்த்து புரட்சித்தலைவரின் சின்னத்தை அபகரித்துள்ள துரோகிகளை தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.